search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் மீட்பு"

    கொடைக்கானல் தங்கும் விடுதியில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் இளம்வயது வாலிபர்களை குறிவைத்து சமூகவிரோத கும்பல் போதை காளான், அழகிகளை வைத்து மயக்கி வருகின்றனர்.

    இதனால் அந்த வாலிபர்கள் மீண்டும், மீண்டும் கொடைக்கானலுக்கு இதற்காகவே வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வாலிபர்களிடம் பணத்தை கரந்து ஏமாற்றிச்செல்கின்றனர்.

    பாம்பார்புரம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் பாம்பார் புரம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், மார்டின் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து இளம் பெண்களை அழைத்து வந்து கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விடுதியில் இருந்த வெளிமாநில பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கிய 5 பெண்கள் மீட்கப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு தங்கி இருந்த பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 5 பேர் பயந்து போய் கழிவறையில் பதுங்கினார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் விடுதி உரிமையாளர் மகேஷ் விரைந்து சென்று அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே தீயணைப்பு வீரர்களும், அங்கு விரைந்து சென்றனர். விருகம்பாக்கம் நிலைய அதிகாரி ஆரிபா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்துக்கு பிறகு ரஞ்சிதா, வித்யா, கவிதா, பவித்ரா, அய்னா, ஆகிய 5 பெண்களை மீட்டனர்.

    காயம் அடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் 12 பேர் கடுமையான போராட்டத்துக்கு பிறகே 5 பெண்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களின் துரித நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அதிகாரி ஆரிபா உள்ளிட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
    ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் மீட்டனர். 5 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை பொன்மேனி பை-பாஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் விபசாரம் நடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் ஓட்டலுக்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது விபசாரத்தில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் ஆத்தூரைச் சேர்ந்த தாமோதரன் மனைவி கவிதா (வயது43), இடுக்கி ஸ்ரீஜா (35), நாமக்கல் மாவட்டம் மோகனூர் பிரியா (21), மதுரை அண்ணாநகர் ஆறுமுகம் மகள் சுதா (23) ஆகிய 4 பேரை போலீசார் மீட்டனர்.

    மேலும் அங்கிருந்த புரோக்கர்களான நெல்லை மாவட்டம் டி.ராமநாதபுரத்தைச் சேர்ந்த அருள்செல்வம் மனைவி மங்கையர்கரசி (37), காளிராஜ் (22), குமரி மாவட்டம் சத்திரங்காடு பாபு (27), பரமக்குடி மருதுபாண்டியன் நகர் ரவிசங்கர் (43), மதுரை கீழவாசல் லட்சுமிபுரம் மங்காராம் (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.57 ஆயிரத்து 700, 13 செல்போன்கள், ஒரு பண மாற்றக்கருவி (ஸ்வைப் மிஷின்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×